பெட்ரோல் பங்க் ஊழியர் திடீர் சாவு

488பார்த்தது
பெட்ரோல் பங்க் ஊழியர் திடீர் சாவு
சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அன்பழகன் (வயது 35). இவர் வடபொன்பரப்பியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது வடபொன்பரப்பி டாஸ்மாக் கடை அருகே வந்தபோது திடீரென ரத்தவாத்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி