கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்னாடு அரசு பழங்குடியினர் ஆரம்பப் பள்ளிக்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இரண்டு டாடா மேஜிக் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த் இன்று கொடியசைத்து பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.