கள்ளகுறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் காவல் வட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க மூலாம் பூசப்பட்ட போலி நகைகளை காட்டி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த வட மாநில கொள்ளையர்கள் ஐந்து பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் போலி நகைகளை காட்டி பொதுமக்களிடம் ஏமாற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.