ரிஷிவந்தியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

588பார்த்தது
ரிஷிவந்தியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுரு, ரிஷிவந்தியத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'தி. மு. க. , ஆட்சி பொறுப்பேற்று மின்சாரம், பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விலைவாசி பொருட்களின் விலைகளையும் உயர்த்தி விட்டது. முன்னாள் முதல்வர் ஜெ. , மகளிர் மற்றும் மாணவர்கள் நலனுக்காக அமல்படுத்திய தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டி, விலையில்லா ஆடு, விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் முடக்கியுள்ளார்.

தற்போது, சிலருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை கொடுத்து ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வு ரத்து, சிலிண்டர் விலை குறைப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புடைய செய்தி