கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்ட பைக் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாணாபுரம் தாலுகா, பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன், 38; இவர் கடந்த 18ம் தேதி தனது பைக்கில் கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளார். அங்கு ஸ்டாண்டில் உள்ள கழிப்பறை அருகே பைக்கை நிறுத்திவிட்டு முத்தன் வெளியே சென்றார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு வந்து பார்த்தபோது, பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினார். முத்தன் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.