கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர் கூட்டம்

67பார்த்தது
கள்ளக்குறிச்சி எஸ். பி. , அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 38 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில், பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதற்கிடையே மனு மீதான நடவடிக்கையில் திருப்தி இல்லாத தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் தொடர்பாக எஸ். பி. , அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ். பி. , ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். பொதுமக்களிடமிருந்து 38 புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தார். தொடர்ந்து புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உடனடியாக தீர்வு காண போலீசாருக்கு அறிவுறுத்தினார்.


கூட்டத்தில் ஏ. டி. எஸ். பி. , க்கள் சரவணன், திருமால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி