வரஞ்சரம் அருகே செம்மண் திருடிய நபரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கூத்தக்குடி பகுதியில் நேற்று காலை 11: 00 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தக்குடி ஏரிக்கரை வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 யூனிட் செம்மண் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சீனிவாசன் மகன் அருள்மணி, 24; என்பவரை வரஞ்சரம் போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.