கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு,
மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை
அர்ச்சகர் சிவஸ்ரீ, கணேசன் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.