கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இன்று ஆகஸ்ட் 1 கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி எம் ஜெய்சங்கர் தலைமையில் மற்றும் சிபிஐ மாவட்ட குழு இரா கஜேந்திரன் அவர்கள் மற்றும் கே. ஜான் பாஷா சிபிஐ எம் எல் ஒன்றிய செயலாளர் சின்னசேலம் அவர்கள் மூவர் தலைமையிலும் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து ஏழை நடுத்தர மக்கள் மீது தாக்குதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளித்தால் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு மேலும் பல சலுகைகள் மத்திய அரசு பட்ஜெட்டில் வழங்கப்படாததால் அதனை கண்டித்து மறியல் போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.