கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கருணபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட கிராம பகுதில் கடந்த மாதம் 19 ஆம் தேதி விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சமய்சிங் மீனா அவர்களை கடந்த மாதம் 19ம் தேதி சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளன. சென்னை தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராக சமய்சிங் மீனா அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.