கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சரக துணைப்பதிவாளர்கள் சுகுந்தலதா, குறிஞ்சிமணவாளன் முன்னிலை வகித்தனர். முகாமில், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்க பணியாளர்களிடமிருந்து 4 மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் கணபதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா மற்றும் அலுவலர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.