கூட்டத்தில் புகார் நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்க வலியுறுத்தல்

77பார்த்தது
கூட்டத்தில் புகார் நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் டி. ஆர். ஓ. , சத்தியநாரயணன் தலைமை தாங்கினார் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் ஆய்வு செய்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாட்டினை தடுக்க வேண்டும். டீ கடைகளில் கலப்பட டீ துாள் கொண்டு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சி, போக்குவரத்து மிகுதியான முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். திருக்கோவிலுார் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து எடுப்பதில்லை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளிகள் சென்று வரபோதிய பஸ்வசதியின்மையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்து சீட்டுகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். சிறுவங்கூர் மருத்துவமனை சாலைகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் உரிய அரசு துறை அதிகாரிகள் பங்கேற்காமல் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுவது போல் உள்ளது. குறிப்பாக நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்பதில்லை. இதனையடுத்து, அடுத்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி கமிஷனர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி