சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி. டி. ஓ. , க்கள் ரங்கராஜன், சவரிராஜ், தி. மு. க. , ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார்.
வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ. , ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தி. மு. க. , மாவட்ட துணை செயலாளர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், முருகேசன், பெரியசாமி, சுதா மணிகண்டன், ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ட்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், ஊராட்சி துணைத்தலைவர் முரளி, கிளை செயலாளர் மாயகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.