ALERT: இடி மின்னலுடன் பலத்த கனமழை; கள்ளக்குறிச்சி மக்களுக்கு எச்சரிக்கை

78பார்த்தது
ALERT:  இடி மின்னலுடன் பலத்த கனமழை; கள்ளக்குறிச்சி மக்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று (ஜுன்.11) 20 மாவட்டங்களுக்கு கனமழை முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, கோவை என 20 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலை: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37- 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி