இந்தியாவில் ஸ்ட்ரீமிங் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி இழந்தது. இதனால் ஏற்பட்ட வருவாய் குறைவால், இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்ய டிஸ்னி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, 'சன் டிவி' தலைவர் கலாநிதி மாறன் மற்றும் கெளதம் அதானியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறன் இதை தனது வசமாக்கினால், இந்திய அளவில் அவரது சாம்ராஜ்ஜியம் உயரலாம் என்று கூறப்படுகிறது.