டெல்லியில் ஐடிஎப் ஜூனியர் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் நேற்று (ஜன.11) தமிழ்நாட்டை சேர்ந்த மாயா (15), ரஷ்ய வீராங்கனை ஏகடேரினா டுபிட்ஸ்யானாவுடன் இறுதிப் போட்டியில் மோதினார். முதல் சுற்றை, 3-6 என்ற புள்ளிக் கணக்கில் இழந்த மாயா, அடுத்த இரு செட்களை, 7-5, 6-2 என்ற கணக்கில் அபாரமாக ஆடி கைப்பற்றினார். இதையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்ற மாயா, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றார்.