மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெறும் நிலையில் அதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், பிரதான அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.