கழுதைப்பால் விற்கும் பெண்ணிடம் நகை பறிப்பு

64பார்த்தது
கழுதைப்பால் விற்கும் பெண்ணிடம் நகை பறிப்பு
கடலூர் திட்டக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி. மனைவி தையல்நாயகி (52). இருவரும் ஊர் ஊராகச்சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் சேலத்திற்கு விற்பனைக்காக வந்திருந்தனர். அன்று விற்பனையை முடித்துக்கொண்டு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே இருவரும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் தையல்நாயகி கழுத்திலிருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினர். அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி