ஜெயக்குமார் மரண வழக்கு: கே.வி. தங்கபாலு ஆஜராகிறார்?

16430பார்த்தது
ஜெயக்குமார் மரண வழக்கு: கே.வி. தங்கபாலு ஆஜராகிறார்?
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்
எழுதி வைத்திருந்த கடிதத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளான கே.வி. தங்கபாலு, எம்எல்ஏ ரூபி மனோகரன் உட்பட பல பெயர்களை குறிப்பிட்டிருந்தார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களிடமிருந்து தனக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கே.வி. தங்கபாலு இன்று விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி