ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா
காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். ஜனவரி 4 ஆம் தேதி அம்மாநில
காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்கிறார். தெலுங்கானா மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவராக ஷர்மிளா பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னை
காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதால், இது ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என
அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்