நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் கூண்டோடு தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அக்கட்சியில் 400-க்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச். 16) நடைபெற்றது. நாதகவில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டோர் வேல்முருகன் முன்னிலையில் தவாகவில் இணைந்தனர். அவர்களை வேல்முருகன் வரவேற்று பேசினார்.