நியாயவிலை கடை பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விநியோகிக்கும் திட்டம் முதல் கட்டமாக, சேலம் மாவட்டம் சீரங்கப்பாளையம் நியாய விலைக்கடையில் தொடங்கியது. இதன் மூலம் உணவுப் பொருட்களின் சுகாதாரத்தை உறுதி செய்வதோடு, பொருட்களின் அளவு குறைவதையும் தடுக்க முடியும். இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைக்கபெறும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அனைத்து நியாய விலை கடைகளிலும் விரிவு படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.