மகாராஷ்டிரா: புனேவில் ஐ.டி. பெண் ஊழியர் 21-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அபிலாஷா பௌசாஹேப் (25) என்ற அந்த பெண் ஊழியர், அதிகாலை தனது தோழி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். திடீரென அவரது நண்பர் வசித்து வரும் 21-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார். நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும், இந்த முடிவை எடுத்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.