நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தான் நடித்த '
சுல்தான் ஆஃப் டெல்லி' வெப் சீரிஸில் வரும் பலாத்கார காட்சிகளை படுக்கையறை காட்சிகள் என விவரிப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார். என் ரசிகர்கள் தொடரைப் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு நடிகருக்கு நடிப்பு என்பது ஒரு கலை மற்றும் தொழில். எனவே, கதையின் ஒரு பகுதியாக இருக்கும் தேவையற்ற காட்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இது போன்ற ஒரு தீவிரமான பிரச்சினையை பல ஊடகங்கள் அற்பமாக கருதுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறினார்.