பள்ளிகள் அரசு அலுவலகங்களுக்கு நாளை (ஜூன் 06) விடுமுறை என பரவும் தகவல் வதந்தி என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. நாளை தேசிய பொது விடுமுறையை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இது AI மூலம் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இது உண்மையான செய்தி அல்ல. நாளை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளதாக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.