ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது. இதில், ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி, புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி, தளபதி கோலமாலி ரஷித் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 உயர்மட்ட ஈரானிய அணு விஞ்ஞானிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.