ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 18வது சீசன் பெரும் எதிர்பார்ப்போடு நாளை (மார்ச். 22) கொல்கத்தாவில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு புதிய விதிகளை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு ஓய்வறையில் அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு போட்டி நாட்கள் மற்றும் பயிற்சி அமர்வுகள் இரண்டிற்கும் பொருந்தும்.