ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு

60பார்த்தது
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உடன்படிக்கையை அடுத்து, ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியா பாகிஸ்தான் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டதால் மீண்டும் போட்டிகள் நடத்தப்படலாம் எனப்படுகிறது. அடுத்த வாரம் மீதமுள்ள போட்டிகளை தொடங்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி