2024ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள 17-வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்காக வீரர்களை ஏலத்தில
் எடுக்கும் மினி ஏலம் இன்று துபாயில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏலம் தொடங்கியுள்ளது. வெறும் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் கடும் போட்டியில் ஈடுபடுகின்றனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்டர்கள், இந்திய ஆல்ரவுண்டர்கள், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் என ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு தேவைகள், வெவ்வேறு இடங்களில் உள்ளன.