பெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்

85பார்த்தது
பெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்
மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகிற மே 20ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. அதில் இனம், வயது மற்றும் பாலினம் பற்றிய விவரங்களுடன் உள்நுழைய வேண்டும். வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசிக்கான ஆதாரத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி