உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தான் வரவேற்பதாக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, அதனை நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உறுதிசெய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.