பெண்களை உயர்கல்விக்கு வரவழைக்கும் நோக்குடன் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.