பாகிஸ்தான், இந்தியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் இந்தியாவிற்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடரும் என இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.