இண்டிகோ விமான சேவைகள் மே.10 வரை ரத்து

62பார்த்தது
இண்டிகோ விமான சேவைகள் மே.10 வரை ரத்து
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. இதனால் எல்லை மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மஷாலா, பிகானர், ஜோத்பூர், கிஷன்கர், ராஜ்கோட் போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்கள் மே 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி