கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானின் தாக்குதல்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில், இந்திய பெண் விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விமானப்படையை சேர்ந்த விமானி ஷிவானி சிங் சிறைபிடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.