குஜராத் மாநிலம் கட்ச் நகரில் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்ச் நகரை நோக்கி இன்று (மே 10) அதிகாலையில் பாகிஸ்தான் செலுத்திய டிரோனை இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவும் டிரோன்கள் நடுவானிலேயே வழிமறித்து அழிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இருநாடுகளின் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.