பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்துள்ளதாக பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் காமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த போது, பாகிஸ்தான் 26-க்கும் மேற்பட்ட இடங்களைத் தாக்க முயன்றது. இரவு 1 மணிக்கு அதிவேக ஏவுகணைகளை வீசியது. பள்ளிகள், மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டன. சமூக ஊடகங்கள் மூலம் போலியான கட்டுக்கதைகளை பாகிஸ்தான் கட்டவிழ்த்துவிடுகிறது. இந்தியா அனைத்தையும் தவிடுபொடியாக்கியுள்ளது என்று தெரிவித்தனர்.