பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இருந்த பயங்கரவாதிகளின் ஏவுதளத்தை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் முற்றிலுமாக அழித்த வீடியோ வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் எல்லை மாநிலங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஜம்முவின் அக்னூர் பகுதிக்கு அருகே உள்ள சியால்கோட் மாவட்டம் லூனியில் உள்ள பயங்கரவாத ஏவுதளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.