இந்தியா-வங்காளதேசம் வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு

67பார்த்தது
இந்தியா-வங்காளதேசம் வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு
வங்காளதேசத்தில் நடைபெறவிருந்த 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தியா–வங்காளதேச வெள்ளைப்பந்து தொடர், அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் தற்போது, அது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி