கொழும்பில் நடந்த முதல் ஒருநாள் போட்டி டிராவில் முடிந்தது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 58, அக்சர் படேல் 33, துபே 25, கோஹ்லி 24, ஸ்ரேயாஸ் 23 ரன் எடுத்து பெவிலியன் அடைந்தனர். இலங்கை பந்துவீச்சாளர்களில் ஹசரங்க மற்றும் சரித் அசலங்கா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.