இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் இருப்பிட சேவைகளை (location services) உடனடியாக ஆப் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் போலி என்று PIB தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய ஆலோசனையை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் இதுபோன்ற செய்திகளை பகிர்வதற்கு முன்பு, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தெரிந்துகொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.