இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விளக்கம் அளித்துள்ள WHO, தற்போது வேகமாக பரவிவரும் கொரோனாவின் LF.7, NB.1.8.1 சப் வேரியன்ட்களானது, தீவிர பாதிப்பை உருவாக்குவதாக எந்த அறிகுறியும் இல்லை. மேலும், தடுப்பூசியே இதை தடுக்கவல்லது எனத் தெரிவித்துள்ளது. மேலும், இத்தொற்றுகள் தீவிரமானவை கிடையாது என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என ICMR-ம் தெரிவித்துள்ளது.