தமிழினத்தை உயர்த்த விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் உரையாற்றிய ஸ்டாலின், "மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.