தண்ணீர் மூலம் உருவாகும் பாக்டீரியா தொற்று தான் காலரா. காலரா ஏற்பட்ட நபருக்கு பொதுவாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தான் முக்கியமான அறிகுறி. மேலும் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு வறண்ட வாய், வறண்ட தோல், கண்கள் வறட்சி, குறைவான சிறுநீர், அதிக தாகம் இதயத்துடிப்பு விரைவாக இருத்தல், குறைந்த இரத்த அழுத்தம், சோம்பல், குழப்பம், தூக்கமில்லை ஆகியவை காலரா பாதிப்பின் ஆபத்தான அறிகுறிகள். உடலில் நீரிழப்பு அதிகம் ஏற்பட்டால் மரணம் கூட ஏற்படலாம்.