சென்னை கொடுங்கையூரில் நித்ய ஸ்ரீ என்ற பெண்மணி மருத்துவரால் கொல்லப்பட்ட விவகாரத்தில், மருத்துவர் சந்தோஷ் தனது குடும்பத்திடம் கதறி இருக்கிறார். அதாவது, தவறான பெண்ணை நான் காதலித்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். காதல் என்ற போர்வை எனது கண்ணை மறைத்துவிட்டது. இதனால் கொலை வழக்கில் கைதாகி இருக்கிறேன். அவளை நம்பி அவளுக்காக பல லட்சங்கள் செலவழித்தேன். என்னை அவள் மிரட்டியதால் வேறு வழியின்றி இப்படி செய்துவிட்டேன் என மருத்துவர் சந்தோஷ் கதறியுள்ளார்.