ஹரியானா மாநிலத்தைச் சே
ர்ந்தவர் ஹர்தீப். இவரது வீட்டில் யோகா ஆசிரியர் ஜக்தீப் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இவர், ஹர்தீப்பின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஹர்தீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து, யோகா ஆசிரியரை கடத்திச் சென்றுள்ளார். அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி, வாயில் டேப் ஒட்டி கடுமையாக தாக்கியிருக்கிறார். பின்னர், 7 அடி பள்ளம் தோண்டி யோகா டீச்சரை உயிருடன் புதைத்துள்ளார்.