உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் வாக்குவாதம் முற்றியதால் மனைவியின் உதட்டை பிடித்து கணவன் கடித்து குதறியுள்ளார். இதில் அதிக ரத்தம் வெளியேறி படுகாயமடைந்த பெண்ணுக்கு 16 தையல்கள் போடப்பட்டன. அப்பெண் தனக்கு நேர்ந்த துயரத்தை வாய்மொழியாக போலீசாரிடம் கூற முடியாமல் முழு சம்பவத்தையும் காகிதத்தில் எழுதி கொடுத்துள்ளார். கணவர் எந்த காரணமும் இல்லாமல் சண்டை போட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.