அசாம்: ராஜ்குமார் என்ற இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனைவி குள்ளமாக இருப்பதாக கூறி திருமணமான 6 நாட்களில் அவரை ராஜ்குமார் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், "திருமணமான 2 நாட்களில் இருந்தே நான் குள்ளமாக இருப்பதாகவும் என் சகோதரி உயரமாக உள்ளதால் அவரை மணப்பேன் எனவும் ராஜ்குமார் கூறினார். தொடர்ந்து என்னை துரத்திவிட்டார்" என்றார்.