மனைவி, நண்பனை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

4699பார்த்தது
மனைவி, நண்பனை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே குண்ணத்தூரைச் சேர்ந்தவர்கள் கொத்தனார் குருநாதன் (35), தேசிங்குராஜ் (25) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் குருநாதனை அடிக்கடி தனது டூவீலரில் தேசிங்குராஜ் அவரது வீட்டில் இறக்கி விடுவது வழக்கம். அப்போது குருநாதன் மனைவி சித்ராவிற்கும் தேசிங்கிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தனிமையில் இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த குருநாதன் அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின் ஆத்திரமடைந்து, இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :