நீலகிரிக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 14) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் அறிவித்துள்ளார். மேலும் அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.